மும்பை-சோலாப்பூர் மற்றும் மும்பை-ஷிர்டி வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள்..

மும்பை-சோலாப்பூர் மற்றும் மும்பை -ஷிர்டி இடையிலான இரண்டு வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி வரும் 10ம் தேதி கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.

இரண்டு ரயில்களும் சென்னை ஐசிஎப் ரயில் பெட்டித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளன.மலைப் பகுதிகளில் பயன்படுத்த வசதியாக இதன் பிரேக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தொடங்குவதற்கு முன்பாக இந்த ரயில்களின் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.

இதற்காக சென்னையில் இருந்து புறப்பட்டு மும்பைக்கு ஒரு  வந்தே பாரத் ரயில் வந்துள்ளது. இன்னொரு ரயில் 6ம் தேதி வர உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.