விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் காரில் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது காரில் இருந்தபடி, வீடியோ ஒன்று எடுத்துள்ளார்.
அந்த வீடியோவில் அந்த சிறுமி தெரிவித்துள்ளதாவது, “சி.எம். தாத்தா” நான் சிவகாசியில இருந்து பேசுகிறேன். சிவகாசியில் ரெயில்வே மேம்பாலம் அமைத்து தாங்க தாத்தா. தினமும் பள்ளிக்கு போகும் போது ரெயில்வே கேட் போட்டுடுறாங்க தாத்தா.
அதனால நான் தினமும் பள்ளிக்கு தாமதமாக போகிறேன் தாத்தா.” என்று அந்த வீடியோவில் சிறுமி முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வீடியோவை சிறுமியின் பெற்றோர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வைரலாகி வருகிறது.