இலங்கை 'ஏ' அணி 249 ஓட்டங்கள் முன்னிலை

நிஷான் மதுஷ்கவின் இரட்டைச் சத்தத்தினால் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான முதலாவது உத்தியோகபற்றற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை ஏ அணி 249 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

காலியில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான நேற்று (02) ஆட்டநேர முடிவின்போது இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 580 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதன்மூலம் இலங்கை அணி ஏழு விக்கெட்டுகளுடன்விக்கெட்டுகளுடன் இரண்டாவது இன்னிங்ஸில் 249 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

நேற்று 228 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டை இழந்த நிலையில்; ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை ஏ அணி மிகவும் சிறப்பான நிலையில் துடுப்பெடுத்தாடியது. குறிப்பாக 91 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மதுஷ்க கடைசிவரை ஆட்டமிழக்காது 370 பந்துகளில் 24 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 207 ஓட்டங்களை பெற்றார்.

இதன்போது அவர் லக்ஷான் மானசிங்கவுடன் (73) இரண்டாவது விக்கெட்டுக்கு 119 ஓட்டங்களையும், நுவனிது பெர்னாண்டோவுடன் (80) மூன்றாவது விக்கெட்டுக்கு 113 ஓட்டங்களையும் இணைப்பாட்டமாகப் பகிர்ந்து கொண்டார்.

நேற்றைய ஆட்ட நேர முடிவில் அணித்தலைவர் நபுன தனஞ்சய மற்றும் மதுஷ்க பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 145 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர். இதில் தனஞ்சய 131 பந்துகளில் 15 பௌண்டரிகளுடன் 89 ஓட்டங்களை பெற்று களத்தில் உள்ளார்.

இந்நிலையில், நான்கு நாட்கள் கொண்ட இந்தப் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் இன்று (03) நடைபெறுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.