தமிழ்நாட்டில் புதிய அரசியல் கட்சி உருவானது..!

தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான பழ.கருப்பையா தனது புதிய கட்சி தொடர்பாக அறிவிப்பை இன்று வெளியிடுவதாக அறிவித்தார். RSS சித்தாந்தம் மற்றும் பாஜகவின் வாக்கு அரசியலுக்கு எதிராக கட்சியை தொடங்குவதாக அவர் தெரிவித்தார்.

இவர் காங்கிரஸ்,மதிமுக என பல கட்சிகளில் பயணம் செய்துவிட்டு 2010ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். பின்னர் 2016ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து விலகி 2019ஆம் ஆண்டு வரை திமுகவில் பயணித்தார். இறுதியாக 2021ஆம் ஆண்டு கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். சிறிது காலம் எந்த ஒரு கருத்தையும் கூறாமல் அமைதியாக இருந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகினார்

இந்நிலையில், ‘தமிழ்நாடு தன்னுரிமை கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கினார் மூத்த அரசியல் தலைவரான பழ.கருப்பையா. சென்னை, ஒய்எம்சிஏ திடலில் வரும் ஞாயிறு அன்று தொண்டர்கள் மாநாடு கூட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.