பிபிசி ஆவணப்பட தடை குறித்த வழக்கு: 3 வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: பிரதமர் குறித்த சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல மனுக்களுக்கு 3 வார காலத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

கடந்த 2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் குறித்து பிபிசி நிறுவனம் ‘இந்தியா-மோடிக்கான கேள்விகள்’ என்ற ஆவணப்படத்தை வெளியிட்டிருந்தது. இந்தப்படத்தினை திரையிடுவதற்கு மத்திய அரசு தடை விதித்தது. இதனை எதிர்த்து மூத்த பத்திரிக்கையாளர் என்.ராம், வழக்கறிஞர் பிரசாந்த் பூசன், திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அதேபோல் இந்த தடை உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் பி.எல்.சர்மாவும் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எம் எம் சுந்தரேஷ் அடங்கிய அமர்வு, “இந்த மனுக்களுக்கு மூன்று வார காலத்திற்குள் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இந்த ஆவணப்படத்தின் தடைக்கான உண்மையான ஆவணங்களையும் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து நீதிபதிகள் அமர்வு,”நாங்கள் நோட்டீஸ் அனுப்புகிறோம். அதற்கு மூன்று வாராங்களுக்குள் பதில் அளிக்கப்படும். அதனைத் தொடர்ந்து இரண்டு வாரங்களில் வழக்கில் இணைந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர். இந்த வழக்குகளின் மறுவிசாரணை ஏப்ரல் மாதத்திற்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

முன்னதாக, மத்திய அரசு ஜனவரி 21 ஆம் தேதி, தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ன் கீழ், அவசரகால வழிமுறைகளை பின்பற்றி, ‘இந்தியா-மோடிக்கான கேள்விகள்’ என்ற சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படத்தின் இணைப்புகளை யூடியூப், ட்விட்டர் தளங்களில் இருந்து நீக்க உத்தரவிட்டிருந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.