இந்திய வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியுள்ள அதானி நிறுவனம் மீது உலகின் முன்னணி நிதி மற்றும் வங்கித்துறை நிறுவனங்கள் மோசடி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது. ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்ற அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து அதானி பங்கு பத்திரங்களின் மதிப்பை பூஜ்ஜியமாக்கியது சுவிட்சர்லாந்து நாட்டின் கிரெடிட் சுவிஸ் வங்கி. இதனைத் தொடர்ந்து சிட்டி குரூப் வங்கியும் அதானியின் பங்கு பத்திரங்களை வைத்து கடன் வழங்க மறுத்துள்ளது. […]