இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே… வேட்பாளர் தேர்வு அதிமுகவில் அடுத்து என்ன?

ஈரோடு இடை தேர்தலில் அதிமுகவின் வேட்பாளரை தேர்ந்தெடுப்பது இனி அதிமுகவின் பொது குழு முடிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு இடியாக இறங்கியுள்ளது.

இரு தரப்பிலும் கூட இத்தகைய தீர்ப்பை எதிர்பாத்திருக்க மாட்டார்கள் என்றும்தான் சொல்ல வேண்டும். ஆனால் ஒன்று; அதிமுக-வில் அனைவரும் இணைவதற்கான நேரம் நெருங்கிவிட்டது என்று இந்த தீர்ப்பு வருவதற்கு முன்பே சசிகலா கூறியது, உச்ச நீதிமன்றத்தின் முடிவை அவர் எந்த அளவுக்கு முன்னரே கணித்திருக்கிறார் என்பதை பார்க்க வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்து நடக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இந்தியாவே ஈரோடு கிழக்கை உற்றுநோக்கியுள்ளது. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுமா என்ற சந்தேக நிலை உருவாகியுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் திமுக வேட்பாளர் தான் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், காங்கிரஸ் தொகுதி என்பதால் காங்கிரசுக்குகே திமுக விட்டுக்கொடுத்துவிட்டது. இதனை அடுத்து அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு அறிவிக்கப்பட்டார். அவருக்கு பாஜக ஆதரவு கொடுக்கும் என்று பார்த்தால் ஓபிஎஸ் உள்ளே நுழைந்து அதற்கும் செக் வைத்துவிட்டார். சரி, ரெண்டு பேரும் பேசி முடிவுக்கு வாங்க ஆதரவு பத்தின நிலைப்பாட்டை அப்புறம் எடுக்குறோம் இன்று பாஜக இருந்து வருகிறது. சரி, பாஜகவின் ஆதரவு இல்லாம தேர்தலை சந்திக்க தயாரான எடப்பாடி பழனிசாமிக்கு சின்னம் மூலமாக செக் வைத்துவிட்டார் ஓபிஎஸ்.

அது மட்டுமில்லாமல், இன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், நீக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களையும் சேர்த்து புதிய பொதுக்குழுவை நடத்தி பொதுவான வேட்பாளரை தேர்ந்தெடுக்க உத்தரவிட்டுள்ளது. இப்போ, அதிமுக யாரை வேட்பாளராக அறிவிக்கும்? இரு தரப்பிலும் சேர்ந்து பொதுக்குழு கூட்டப்படுமா? அப்படி கூட்டப்பட்டால் ஓபிஎஸ் தரப்பில் இருந்து வேட்பாளர் நிறுத்தப்படுவாரா? எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து வேட்பாளர் நிறுத்தப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.