திட்டங்களுக்கு அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களினதும் ஒத்துழைப்பு வேண்டும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

2023 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்களுக்கு அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களினதும், அதிகாரிகளினதும் பூரண ஆதரவை எதிர்பார்ப்பதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கேட்போர் கூடத்தில் நேற்று (02) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இதன்போது நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் ஊடாக 2022 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் மற்றும் அத்திட்டங்களின் குறைப்பாடுகளை இனம்கண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கீழ் இயங்கும் தொழில் சங்க பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய அமைச்சர், இதுவரை எதிர்நோக்கிய சவால்கள் மற்றும் பல்வேறு கோரிக்கைகளுக்கும் உரிய தீர்வு எட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.