மத்தாப்பு பற்ற வைத்தபோது பரிதாபம்.! தீப்பிடித்து 7 வயது சிறுமி பலி.!

ஈரோடு மாவட்டத்தில் மத்தாப்பு பற்ற வைத்தபோது தீப்பற்றி 7 வயது சிறுமி உடல் கருகி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் திங்களூர் கிழக்கு புதூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சரவணன் (48). இவரது மகள் சஸ்விதா (7) அதே பகுதியில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சஸ்விதா சம்பவத்தன்று பொல்லாநாயகன் பாளையத்தில் உள்ள அவரது தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்பொழுது அங்கு பூஜை அறையில் உள்ள விளக்கில் மத்தாப்பு பற்ற வைத்தபோது எதிர்பாராத விதமாக சஸ்விதாவின் பாவாடையில் தீப்பற்றி, மளமளவென பரவியது. இதை எடுத்து பலத்த காயம் அடைந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.