குழந்தை திருமணம்..ஒரே நாளில் 1800 பேர் கைது..அஸ்ஸாம் முதல்வர் அதிரடி.!

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளார். இந்த சூழலில் அஸ்ஸாமில் சராசரியாக 31 சதவிகித பெண் குழந்தைகள், 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்படுவதாக, சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் தெரிய வந்தது.

இதையடுத்து, குழந்தைத் திருமணத்திற்கு எதிராக காவல்துறையினரின் மாநிலம் தழுவிய நடவடிக்கைக்கு முன்னதாக உயர்மட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் நேற்று ஆலோசனை நடத்தினார். குழந்தைத் திருமணம் புரிவோர், அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு, காவல்துறைக்கு அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உத்தரவிட்டார்.

மேலும் நேற்று அவர் தனது டிவிட்டர் பதிவில், “அசாம் மாநிலத்தில் குழந்தை திருமண அச்சுறுத்தலை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. இதுவரை அசாம் போலீசார், மாநிலம் முழுவதும் 4,004 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இன்னும் சில நாட்களில் போலீஸ் நடவடிக்கை எடுக்கும். வழக்குகள் மீதான நடவடிக்கை நாளை (பிப்ரவரி 3 (அதாவது இன்று)) முதல் தொடங்கும். அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்யும் ஆண்கள் மீது பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் அல்லது போக்சோ சட்டத்தின்கீழும், 14-18 வயதுக்குட்பட்ட டீன் ஏஜ் பெண்களை திருமணம் செய்யும் ஆண்களுக்கு தடை விதிக்கப்படும் என்றும் அஸ்ஸாம் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

அசாமில் தாய் மற்றும் சிசு இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. அதற்கு முக்கிய காரணம், குழந்தை திருமணமாகும். அதிக குழந்தை இறப்பு விகிதம் மற்றும் மகப்பேறு இறப்பு விகிதம் (MMR) முக்கிய காரணம் குழந்தை திருமணம் ஆகும். மாநிலத்தில் சராசரியாக 31 சதவிகிதம் தடைசெய்யப்பட்ட குழந்தை திருமணங்கள் நடைபெறுகிறது,” என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

மேலும் குழந்தை திருமணத்திற்கு எதிரான இந்த போர், மதச்சார்பற்றதாக இருக்கும் என்றும், எந்த ஒரு சமூகத்தையும் குறிவைத்து இத்தாக்குதல் (நடவடிக்கை) நடைபெறாது என்றும் முதலமைச்சர் கூறினார். மதகுருமார்கள், பாதிரியார்கள் போன்ற திருமணங்களை நடத்துபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்த நிலையில் முதல்வரின் உத்தரவின் பேரில், மாநில காவல்துறையினர் அதிரடியாக களமிறங்கினர். குழந்தைத் திருமணம் தொடர்பான புகார்கள், வழக்குகளை கையிலெடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் விசாரணையை முடுக்கிவிட்டனர்.

அவ்வகையில் மாநிலம் முழுவதும் குழந்தைத் திருமணம் தொடர்பான வழக்குகளில் இதுவரை 1,800 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அத்துடன், மாவட்டம் வாரியாக பதிவான வழக்குகளின் விவரங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

என்னங்க ரூ.5,300 கோடி; பட்ஜெட்ல ஒன்னுமே இல்ல- கொதிக்கும் கர்நாடக காங்கிரஸ்!

குழந்தைத் திருமண வழக்குகளைப் பொறுத்தவரை துப்ரி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் 370 வழக்குகள் பதிவாகி உள்ளன. அதைத் தொடர்ந்து ஹோஜாய் மாவட்டத்தில் 255 வழக்குகளும், உதால்குரி மாவட்டத்தில் 235 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.