அதிமுக டாட்… சைலண்ட் மோடில் ஓபிஎஸ்; காத்திருக்கும் இன்னொரு சான்ஸ்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவில் பிளவு என்ற சலசலப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இருவரும் சமரசமாக போக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதற்காக அதிமுக பொதுக்குழுவை கூட்டி பொதுவான வேட்பாளரை தேர்வு செய்யுங்கள் என உத்தரவிட்டது. இந்த இடத்தில் வேட்பாளருக்கான ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திடும் அதிகாரத்தை அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு தேர்தல் ஆணையம் அளித்தது.

எடப்பாடிக்கு மவுசுஅவர் எடப்பாடி பழனிசாமி நிறுத்திய வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுக்கு ஆதரவு கேட்டு பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் கடிதம் எழுதி ஆதரவு திரட்டினார். இந்த கடிதங்கள் உடன் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்து வேட்பாளருக்கான ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திட்டு கொடுத்தார். அதன்படி, கே.எஸ்.தென்னரசுக்கு இரட்டை இலை கிடைத்துவிட்டது. அப்படியெனில் எடப்பாடி பழனிசாமி பக்கம் சின்னம் வந்துவிட்டது.
சின்னம் முடங்கக் கூடாதுஇந்த இடத்தில் அதிமுக வெற்றிக்காக விட்டுக் கொடுத்தேன். சின்னம் முடங்கி விடக் கூடாது என தியாகம் செய்தேன் என ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் கொடுத்துள்ளார். இதை எடப்பாடி தரப்பு தங்களுக்கு சாதகமான விஷயமாக மாற்ற பார்க்கிறது. இனிமேல் உண்மையான அதிமுக நாங்கள் தான் என்ற பிம்பத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உருவாக்கி வருகின்றனர்.
​​
சைலைண்ட் மோட்இரட்டை இலை சின்னத்திற்காக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்வேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தாலும், அதை எடப்பாடி தரப்பு ஏற்க வாய்ப்பில்லை. இதனால் அடுத்த ஒரு மாதத்திற்கு சைலண்ட் மோடிற்கு செல்லவிருப்பதாக தெரிகிறது. முன்னதாக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்யுங்கள் என உச்ச நீதிமன்றம் கூறிய போதே, தனது வேட்பாளர் செந்தில் முருகனுக்கு ஆதரவு கேட்டு குறைந்தது 500 முதல் 600 பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை பெற்றிருக்க வேண்டாமா? என்பது தான் அரசியல் பார்வையாளர்களின் கேள்வியாக இருக்கிறது.
டெல்லி சமாச்சாரம்இந்த இடத்திலேயே ஓபிஎஸ் கோட்டை விட்டு விட்டார். அதேசமயம் பாஜகவின் கணக்கும் கச்சிதமாக அரங்கேறி விட்டது. அவர்களை பொறுத்தவரை இரட்டை இலை சின்னம் முடங்கி விடக் கூடாது. அதுதான் திமுகவை எதிர்த்து அரசியல் செய்வதற்கு பெரிதும் கைகொடுக்கக் கூடிய ஒன்று. எனவே டெல்லி அளவில் சரியான வகையில் காய்களை நகர்த்தி சின்னத்தை அதிமுக கையில் ஒப்படைத்து விட்டனர். இதன் பின்னணியில் 2024 மக்களவை தேர்தல் கணக்குகளும் இருக்கின்றன.
எடப்பாடி குஷிஇதுநாள் வரையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக நிற்பது போன்ற தோற்றத்தை காண்பித்து விட்டு தேர்தல் சமயத்தில் ஒட்டுமொத்தமாக பாஜக அணி மாறியிருப்பதாக சொல்லப்படுகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தில் வேட்பாளர், இரட்டை இலை சின்னம், அதிமுக என மூன்று விஷயங்களும் எடப்பாடி பழனிசாமி வசமிருக்கிறது.
தேர்தலுக்கு பின்ஆனால் இவை அனைத்தும் தற்காலிக தீர்வுகள் மட்டுமே. உச்ச நீதிமன்ற உத்தரவின் படி அவைத் தலைவருக்கான அதிகாரம், இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு உள்ளிட்டவை அனைத்தும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக மட்டுமே. அதன்பிறகு இவற்றுக்கு அதிகாரம் கிடையாது. எனவே தேர்தல் முடிந்த பின்னர் அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பிற்காக காத்திருக்க வேண்டும்.
​​
அரசியல் வியூகம்அதை வைத்தே ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் நிர்ணயிக்கப்படும். தற்போது வரை பாஜகவின் குட்புக்கில் ஓபிஎஸ் இருப்பதால் அவ்வளவு சாதாரணமாக அவரை கைவிட்டு விடாது. அதேசமயம் ஒன்றுபட்ட அதிமுகவை தான் பாஜக விரும்புவதாக கள நிலவரம் தெரிவிக்கிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிந்ததும் ஓபிஎஸ் அரசியல் வியூகங்கள் வேறு மாதிரியாக இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.