இலங்கை கோடீஸ்வரரின் மரணம் தொடர்பில் இந்தோனேசிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையின் பிரபல தொழிலதிபர் ஒனேஷ் சுபசிங்க (Onesh Subasinghe), இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
45 வயதான ஒனேஷ் சுபசிங்க, குடும்ப நிறுவனமான Opex Holding (Pvt) Ltd,. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராவார். பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்ற பன்முக வணிகர் என நிறுவனத்தின் இணையதளம் அவரை விவரிக்கிறது. ஒனேஷின் தந்தை அல்பிரட் சுபசிங்கவால் நிறுவப்பட்ட Opex, உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தைக்கு திரவ உரங்களை தயாரிக்கிறது.
GeniusCelebs
சுபசிங்கவும் அவரது பிரேசிலிய மனைவியும் அவர்களது 4 வயது மகளும் இந்தோனேசியாவிற்கு சுற்றுலா சென்றனர்.
அவர்கள் இந்தோனேசியா செல்வதற்கு முன், கொழும்பிலிருந்து அவர்களுடன் இருந்த ஒரு அறியப்படாத பிரேசிலிய பெண்ணுடனும் இருந்தனர்.
சுபசிங்க கடைசியாக செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 2) கொழும்பில் தனது குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டார். இதனால் கவலையடைந்த இலங்கையில் உள்ள சுபசிங்க குடும்பத்தினர், அந்த அடுக்குமாடி குடியிருப்பை தொடர்பு கொண்டு, அந்த சுபசிங்க இருக்கும் இடத்தை சரிபார்க்கும்படி கேட்டுக்கொண்டனர்.
குடியிருப்பு நிர்வாகம் சுபாசிங்கைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் நிர்வாகம் அவரது வீட்டிற்குள் கதவை உடைத்துக்கொண்டு நுழைந்து பார்த்தபோது, போடப்பட்டிருக்கும் படுக்கையறையில் சுபசிங்கின் சடலத்தைக் கண்டெடுத்தது.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், சுபசிங்கின் மனைவி மற்றும் மகள் அடையாளம் தெரியாத பெண் ஒருவருடன் செவ்வாய்க்கிழமை குடியிருப்பிலிருந்து வெளியேறியதைக் காணமுடிந்தது. கதவில் “தொந்தரவு செய்யாதே” என்ற பலகையையும் வைக்கப்பட்டிருந்தது.
மூவரும் ஒரே நாளில் இந்தோனேசியாவிலிருந்து கத்தாரின் தோஹாவுக்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றது தெரியவந்தது.
வெளிவிவகார அமைச்சு மற்றும் ஜகார்த்தாவில் உள்ள இலங்கை தூதரகம் ஆகியவையும் இந்த கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றன .