Rakhi Sawant: என் வாழ்க்கையை கெடுத்துட்டார்… என்னை அடித்தார்… சர்ச்சை நடிகை புகார்.. கணவர் கைது!

நடிகை ராக்கி சாவந்தின் கணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ராக்கி சாவந்த்பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ராக்கி சாவந்த். தமிழ் சினிமாவில் ‘என் சகியே’, ‘முத்திரை’ கம்பீரம் உள்ளிட்ட படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார் ராக்கி சாவந்த். ராக்கி சாவந்த் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். பலமுறை பல்வேறு விஷயங்களுக்காக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார் ராக்கி சாவந்த். கடைசியாக இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியேறினார்.
​ Nayanthara: கல்யாணத்துக்கு பிறகு இப்படி மாறிட்டாங்களே நயன்தாரா… இனிமே அதுவும் நடக்குமா?​
ரகசிய திருமணம்பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கையோடு தனது திருமண போட்டோக்களை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் ராக்கி சாவந்த். ஏற்கனவே மும்பையை சேர்ந்த தொழில் அதிபரை திருமணம் செய்து விவாகரத்து செய்த நடிகை ராக்கி சாவந்த், கடந்த ஆண்டு மே மாதம் மைசூரை சேர்ந்த அடில் துர்ரானி என்பவரை ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்தார். ராக்கி சாவந்த் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அடில் துர்ராணி, ராக்கி சாவந்திடம் இருந்து விலகினார்.
​ Nayanthara: ஊதா கலர் புடவை… ஸ்லீவ்லெஸ் ஜாக்கேட்டில் திணறடிக்கும் நயன்தாரா… லேட்டஸ்ட் புகைப்படங்கள்!​
திருமணத்தை மறுத்த கணவர்இதையடுத்து இதுவரை ரகசியமாக வைத்திருந்த திருமணத்தை சமூக வலைதளங்கள் மூலம் அம்பலப்படுத்தினார் ராக்கி சாவந்த். காதலருக்காக நடிகை ராக்கி சாவந்த் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். இதற்காக தனது பெயரை ‘ராக்கி சாவந்த் பாத்திமா’ என்று மாற்றிக் கொண்டார். அவர்களின் திருமணமும் இஸ்லாமிய முறைப்படிதான் நடைபெற்றது. ராக்கி சாவந்த் திருமண போட்டோக்களை வெளியிட்டதுமே அவை அனைத்தும் போலியானவை, தனக்கும் ராக்கி சாவந்துக்கும் திருமணம் நடக்கவில்லை என மறுத்தார் அவரது கணவர் அடில் துர்ரானி.
​ Kangana Ranaut warning: வீடு புகுந்து உதைப்பேன்… பிரபல நடிகரை பகிரங்கமாக மிரட்டிய கங்கனா ரனாவத்!​
தாயார் மரணம்தொடர்ந்து, தங்களுக்கு திருமணம் நடைபெற்ற உண்மை, தனது கணவருக்கு வேறு பெண்களுடன் கள்ளத் தொடர்பு உள்ளது என குற்றம்சாட்டி வந்தார் ராக்கி சாவந்த். இந்த பிரச்சனைகள் ஒரு புறம் போயிக்கொண்டிருக்கும் நிலையில் ராக்கி சாவந்தின் தாயார் புற்றுநோயால் மரணமடைந்தார். இதனால் மனமுடைந்து போன ராக்கி சாவந்த் தனது அம்மாவும் இறந்துவிட்டார், தனது திருமண வாழ்க்கையும் சிக்கலில் உள்ளதால் தான் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாக கூறியிருந்தார்.
​ Prabhas engagement: பாகுபலிக்கு அடுத்த வாரம் நிச்சயதார்த்தம்… யார் கூட எங்கேனு பாருங்க!​
அடித்து துன்புறுத்துகிறார்இந்நிலையில் ராக்கி சாவந்தின் கணவரான அடில் துர்ரானி கைது செய்யப்பட்டுள்ளார். தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக ராக்கி சாவந்த் நேற்றிரவு ஒஷிவரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அடில் மீது போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்தனர். புகார் அளித்த கையோடு செய்தியாளர்களிடம் கதறியப்படி பேசிய ராக்கி சாவந்த் தன்னை அடில் துர்ராணி அடித்து துன்புறுத்துவதாக கூறினார். தன்னை ஏன் இப்படி அடிக்கிறாய்? எல்லாவற்றையும் மீடியா முன்பு சொல்வேன் என்று கூறிய போதும் உன்னை யாரும் நம்பமாட்டார்கள் என்று கூறி அடித்தார் என கதறிய ராக்கி சாவந்த், அடில் துர்ரானிக்கு எதிரான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக கூறினார்.
​ வாணி ஜெயராம்… இப்படியும் மரணம் வருமா?​
கணவர் கைதுமேலும் தனது கணவரான அடில் துர்ரானி தன்னை விட்டுவிட்டு வேறொரு பெண்ணுடன் சென்றுவிட்டதாகவும் இப்போது அந்த பெண்ணுடன்தான் வசித்து வருவதாகவும் கூறினார். தன் கணவரை பறித்துக்கொண்டது அந்த பெண்ணுக்கு தான் வெட்கக்கேடு என்றும் தெரிவித்தார். இந்நிலையில் அடில் துர்ராணி, ராக்கி சாவந்தின் வீட்டில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் ஷேர் செய்துள்ள ஆடியோவில், நான் புகார் கொடுத்ததால் அடில் கைது செய்யப்பட்டுள்ளார். இது டிராமா இல்லை, அடில் துர்ரானி என் வாழ்க்கையை சீரழித்து விட்டார். அவர் என்னை தாக்கினார், என் பணத்தை பறித்துக்கொண்டார் என கூறியுள்ளார். ராக்கி சாவந்தின் கணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.​ Kangana Ranaut: பொண்டாட்டிக்காக பிரபல நடிகர் என்னை வேவு பார்க்கிறார்… கங்கனா ரனாவத் பகீர்!​
Rakhi Sawant

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.