உலகை உலுக்கிய பயங்கர நிலநடுக்கங்கள்…. 3 லட்சத்தை தாண்டி போன கொடூரம்!

துருக்கி நாட்டில் நேற்று அதிகாலை 4.17 மணிக்கு 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்பிறகு பலமுறை நிலநடுக்கம் ஏற்பட்டு பொதுமக்களை பீதியடைய செய்து வருகிறது. இரண்டாவது நாளாக இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சேதம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துருக்கியில் துயரம்

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இடிபாடுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பேரிடர் மீட்பு குழுவினரை அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில் 2000ஆம் ஆண்டிற்கு பின்னர் நடந்த மோசமான நிலநடுக்கங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

துருக்கி நிலநடுக்கம்: 3 நாட்களுக்கு முன்பே கணித்த விஞ்ஞானி; பேரழிவு தொடருமாம்!

வரலாற்று பதிவுகள்

ஜனவரி 26, 2001 – குஜராத்தில் 7.7 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 20 ஆயிரம் பேர் பலியாகினர்.மே 21, 2003 – அல்ஜீரியாவில் 6.8 ரிக்டர் அளவுகோலில் நடந்த நிலநடுக்கத்தில் 2,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.டிசம்பர் 26, 2003 – தென்கிழக்கு ஈரானில் 6.6 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50 ஆயிரம் பேர் பலியாகினர்.டிசம்பர் 26, 2004 – இந்தோனேசியாவில் 9.1 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட நிலடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டு 10க்கும் மேற்பட்ட நாடுகளில் 2,30,000 பேரை பலி வாங்கியது.மார்ச் 28, 2005 – இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவில் 8.6 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,300 பேர் உயிரிழந்தனர்.அக்டோபர் 8, 2005 – பாகிஸ்தானின் காஷ்மீர் பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 80 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.மே 26, 2006 – இந்தோனேசியாவின் ஜாவா தீவில் 6.3 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 5,700 பேர் பலியாகினர்.மே 12, 2008 – சீனாவின் கிழக்கு சியாச்சின் பகுதியில் 7.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 87,500 பேர் உயிரிழந்தனர்.ஜனவரி 12, 2010 – ஹைதி தீவில் 7.0 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 3,16,000 பேர் பலியாகினர்.மார்ச் 11, 2011 – ஜப்பானின் வடகிழக்கு கடலோரப் பகுதியில் 9.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.ஏப்ரல் 25, 2015 – நேபாளத்தில் 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8,800 பேர் பலியாகினர்.செப்டம்பர் 28, 2018 – இந்தோனேசியாவில் 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4,300 பேர் உயிரிழந்தனர்.ஆகஸ்ட் 14, 2021 – ஹைதி தீவில் 7.2 ரிக்டர் அளவில் நடந்த நிலநடுக்கத்தால் 2,200 பேர் பலியாகினர்.ஜூன் 22, 2022 – ஆப்கானிஸ்தான் நாட்டில் 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,100 பேர் உயிரிழந்தனர்.
கொத்து கொத்தாய் மரணம்… பலி 600ஐ தாண்டியாச்சு- துருக்கியின் நிலை என்ன?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.