ராணிப்பேட்டை: ஆற்காட்டில் டெண்டர் கடிதத்தில் முத்திரையை முறைகேடாக பயன்படுத்திய அதிமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தூய்மை பணியாளருக்கு பணம் கொடுத்து அஞ்சல் அலுவலக முத்திரையை பெற்று டெண்டர் கடிதத்தில் பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. அஞ்சல் அலுவலக முத்திரையை முறைகேடாக பயன்படுத்திய அதிமுக நகர செயலாளர் ஜிம் சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.