இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு: 17வயது பாலஸ்தீன சிறுவன் உயிரிழப்பு

இஸ்ரேலிய ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் இறந்ததாக பாலஸ்தீனம் குற்றஞ்சாட்டியுள்ளது.

மேற்குக்கரை பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இருதரப்பினருக்கும் இடையே மோதல் நிகழ்ந்து வரும் நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட நப்லஸ் நகரிலுள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தியதில் முகத்தில் குண்டுகாயத்துடன் சிறுவன் இறந்ததாகவும், மேலும் 3 பேரை ராணுவம் கைது செய்ததாகவும் பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது.

ஆனால், பாலஸ்தீனத்தின் குற்றச்சாட்டுகளை தாங்கள் ஆய்வு செய்து வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.