#தமிழகம் | கிணற்றில் வந்த மரண ஓலம்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி!

தேனி மாவட்டம், பொட்டிபுரம் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, 3 குழந்தைகள் உட்பட ஐந்து பேர் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் சொக்கத்ததையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கிணற்றுக்குள் இருந்து குழந்தைகளின் மரண ஓலம் கேட்டு, அந்த பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கவே, தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

முதல்கட்ட விசாரணையின்படி குடும்ப தகராறில் தற்கொலை முயற்சி சம்பவம் அரங்கேறியுள்ளது தெரியவந்துள்ளது. 

மேலும் சில முக்கிய செய்திகள் : 

நீர்வளத் துறை கூடுதல் தலைமை செயலாளராக கண்ணனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் தற்போது இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையரக இருந்தார்.

ஆந்திராவிலிருந்து கிருஷ்ணகிரி, வேலூர் வழியாக கிரானைட் கற்கள் கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு முதன்மைச் செயலாளருக்கு ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.

சவுகார்பேட்டை பகுதிகளில் கொத்தடிமைகளாக ரூ.5 ஆயிரம் மட்டும் கொடுத்து 12 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்த 24 வடமாநில சிறுவர்களை அரசு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.