டெல்லி: தமிழகம், கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் ஆளுநர்கள் அரசுக்கு எதிராக செயல்படுகின்றனர் மக்களவையில் எம்.பி.கனிமொழி பேசினார். தமிழக ஆளுநர் 20 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளதாக மக்களவையில் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் தேர்தல் ஏதும் இல்லை என்பதால் ஜனாதிபதி உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டவில்லை என்றும் எம்.பி.கனிமொழி தெரிவித்தார்.