நடிகை ராக்கி சாவந்த் கணவர் நள்ளிரவில் கைது..!!

மாடல் அழகியான ராக்கி சாவந்த், பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார்.இந்தி,தெலுங்கு, கன்னடம், மராத்தி, தமிழ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.கடந்த ஆண்டு ரித்தேஷ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டதாவும் தனக்கு அற்புதமான கணவர் கிடைத்து இருப்பதாகவும் கூறியிருந்தார்.அதன் பின்னர், 2022ம் ஆண்டு ராக்கி சாவந்த்தும் – ரிதேசும் விவாகரத்து செய்தார்.

இந்நிலையில், இந்து மதத்தை சேர்ந்த ராக்கி சாவத் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த தனது காதலனான அடிலை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் தொடர்பாகவும் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டன.

இந்நிலையில், தனது கணவர் அடில் கான் துரானி தன்னிடம் வரதட்சணை கேட்டு மிரட்டுவதாகவும், தன்னை தாக்குவதாகவும், தன் பணம் நகைகளை பறித்துக்கொண்டதாகவும் ராக்கி போலீசில் புகார் அளித்தார்.

மேலும், இயற்கைக்கு மாறான பாலியல் உறவில் ஈடுபடுவதாகவும், மத வழிபாடு செய்ய கட்டாயப்படுத்துவதாகவும், தன்னை தாக்குவதாகவும் அடுக்கடுக்கான புகார்களை அளித்தார். நடிகை ராக்கி சாவத் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அடில் கான் துரானியை போலீசார் நேற்று இரவு 11 மணியளவில் கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.