நிலநடுக்கத்தில் உயிரிழந்து குளிர் சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நபர்: திடீரென நிகழ்ந்த அற்புதம்…


சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்த ஒருவருடைய உடல் இரண்டு நாட்கள் குளிர் சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தபின்னரும், அவர் திடீரென உயிர் பெற்றெழுந்த அற்புதம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

இரண்டு நாட்கள் குளிர் சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த உடல்

நிலநடுக்கத்தல் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளுக்கிடையே இருந்து அஹமது (Ahmed al-Maghribi) என்பவரின் உயிரற்ற உடல் மீட்கப்பட்ட நிலையில், அவரை முறைப்படி அவரது உறவினர்கள் அடையாளம் காண்பதற்காக, அவரது உடல் மருத்துவமனை ஒன்றில் குளிர் சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்துள்ளது.

இரண்டு நாட்களுக்குப் பின், அவரது உறவினர் ஒருவர் வந்து அவரை அடையாளம் கண்டதைத் தொடர்ந்து, இறந்த உடலை வைக்கும் பை ஒன்றில் வைத்து அஹமதுவின் உடல் அவரது உறவினர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தில் உயிரிழந்து குளிர் சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நபர்: திடீரென நிகழ்ந்த அற்புதம்... | Dead Man Pulled Earthquake Rubble

இறுதிச்சடங்குக்காக கொண்டு செல்லப்பட்ட உடல்

அஹமதுவின் உடல் இறுதிச்சடங்குக்காக கல்லறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அப்போது திடீரென அவரது உடல் வைக்கப்பட்டிருந்த பை அசைந்துள்ளது. அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பையைத் திறந்துபார்க்க, அஹமது உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது.

உடனடியாக மீண்டும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அஹமதுவிற்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
 

நிலநடுக்கத்தில் உயிரிழந்து குளிர் சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நபர்: திடீரென நிகழ்ந்த அற்புதம்... | Dead Man Pulled Earthquake Rubble



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.