கோவை: கோவை பேரூரில் தஞ்சமடைந்துள்ள மக்னா காட்டு யானையை மயக்க மருந்து செலுத்தி பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர். ஓய்வு பெற்ற மருத்துவர் மனோகரன், சதாசிவம், சுகுமார், பிரகாஷ் ஆகியோர் யானைக்கு மயக்க மருந்து செலுத்த ஆயுத்தமாகியுள்ள நிலையில் நொய்யல் ஆற்றுப்பகுதிக்கு 120 பேர் கொண்ட வன ஊழியர்கள், வேட்டைத்தடுப்பு காவலர்களும் சென்றுள்ளனர்.