டெல்லி: பிரதமரை விமர்சித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன்கேராவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பவன்கேராவுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. டெல்லியில் இருந்து ராஜஸ்தான் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் பவன்கேராவை விமானத்தில் ஏற்ற மறுப்பு தெரிவிக்கப்பட்டது.