வால்பாறை: வால்பாறை பாதுகாக்கப்பட்ட பகுதியான அக்காமலை புல்மலை வனப்பகுதியில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. மூணாறு வனத்தில் பிடித்த காட்டுத் தீ, கட்டுக்கடங்காமல் வால்பாறை அக்காமலை புல்மலை வரை பரவியுள்ளது. தீயணைப்பு வாகனங்கள் தீ பரவிய இடத்துக்கு செல்லமுடியாத நிலையில் ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்க கோரிக்கை வைத்துள்ளனர்.