2வது கட்ட இந்திய ஒற்றுமை பயணம்: ராகுல் காந்தி தொடங்க உள்ளதாக தகவல்!

புதுடெல்லி: குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து 2வது கட்ட இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் பாசிகட் வரை 2- வது கட்ட இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்வார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இந்தியாவின் மேற்கு எல்லையில் இருந்து கிழக்கு எல்லை வரை 2-ம் கட்ட ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்கிறார். ஏற்கனவே கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை முதல் கட்டமாக ஒற்றுமை பயணம் ராகுல் காந்தி மேற்கொண்டார்.

குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து அருணாச்சலப் பிரசேத்தின் பாசிகட் வரை 2-வது கட்டமாக ராகுல் காந்தி ஒற்றுமை பயணம் மேற்கொள்ளவுள்ளார் என காங்கிரஸ் நிர்வாகிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.