சேத்துப்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த நம்பேடு மோசவாடி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல்(43), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சித்ரா(37). மகள்கள் சாருலதா(18), சார்மி(9), சத்யா(7). இவர்களில் சார்மி கரிப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 4ம்வகுப்பு மாணவி. வடிவேல் புதிய வீடு கட்டி வருகிறார்.
அருகே செப்டிக் டேங்க் கட்டப்பட்டு வந்தது. செப்டிக் டேங்க் அருகே நேற்று மாணவி சார்மி விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென செப்டிக் டேங்க் மண் சரிந்து விழுந்தது. இதில் மாணவி சார்மி சிக்கிக்கொண்டார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சார்மியை மீட்க முயன்றும் முடியவில்லை.
இதுகுறித்து தகவலறிந்த சேத்துப்பட்டு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மண்ணை அகற்றி சார்மியை சடலமாக மீட்டனர். இதைபார்த்ததும் சார்மியின் பெற்றோர் மற்றும் ஊர் மக்கள் கதறி அழுதனர்.
இதுகுறித்து சேத்துப்பட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.