புதிய மதுபான கொள்கை முறைகேடு புகாரில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாயை சிபிஐ கைது செய்துள்ளது.
முன்னதாக டெல்லி கலால் வரிக் கொள்கை ஊழல் வழக்கு தொடா்பாக சிசோடியா வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. அதனை தொடர்ந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ, அவரை விசாரணைக்கு ஆஜராகக் கோரி இரண்டு முறை சம்மன் அனுப்பியது.
அதனைத் தொடர்ந்து சிசோடியா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சிபிஐ அனுமதி கோரியது. இதனையடுத்து, மனீஷ் சிசோடியாவை ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது.
இந்நிலையில் சிபிஐ தலைமையகத்தில் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாக விசாரணைக்கு ஆஜரான நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். 2ஆம் கட்ட விசாரணைக்கு சம்மன் அனுப்பியதால் இன்று அவர் சிபிஐ தலைமையகத்தில் ஆஜராகி இருந்தார்.
அப்போது அவரை கைது செய்து சிபிஐ நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை 9 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in