இமயமலை அல்லது இந்தியாவின் வடக்கு பிராந்தியத்திற்கு அருகில் பாரிய நிலநடுக்கம் ஏற்படாலம் என்ற அனுமானங்களை விலக்கிக்கொள்ளவதாக இலங்கையின் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் இந்தியாவின் வடக்குப் பகுதியில் சுமார் 8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் எனவும் இதனால் இலங்கையும் பாதிக்கப்படும் என்றும் இந்திய புவியியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இருப்பினும் இது தொடர்பில் இலங்கையர்கள் வீண் அச்சம் கொள்ள தேவையில்லை என்று புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகின்றது லங்காசிறியின் செய்திச் சுருக்கம்,