கருத்து வேறுபாட்டினால் பிரிந்து சென்ற கணவர்.! ஆத்திரத்தில் மனைவி செய்த விபரீத செயல்..!

மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் அண்ணா நகரை சேர்ந்த பாண்டியராஜா மகள் பாண்டீஸ்வரி. இவர் மதுரையில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். இவருக்கும் திருமங்கலம் என் ஜி ஒ நகரை சேர்ந்த நவீன் பிரகாஷ் என்பவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து, இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். அதன் பின்னர் பாண்டீஸ்வரியின் தந்தை பாண்டியராஜா அவர்கள் இருவரையும் தனது வீட்டு மாடியில் குடி வைத்து கொண்டார். இந்நிலையில் கடந்த மாதம் பாண்டீஸ்வரிக்கும் நவீன் பிரகாஷ்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 

இதனால், ஆத்திரமடைந்த நவீன் பிரகாஷ் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதைத்தொடர்ந்து, பாண்டீஸ்வரி நவீன் பிரகாஷிடம் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் நவீன் பிரகாஷ் சேர்ந்து வாழ மறுத்துள்ளார்.

இதற்கிடையே, நவீன் பிரகாஷ் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாண்டீஸ்வரி தன்னிடம் அடிக்கடி தகராறு செய்து தொந்தரவு செய்வதாக புகார் அளித்துள்ளார். அதன் படி, போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரையும் அழைத்து விசாரணை நடத்தினர். இருப்பினும் அவர்கள் இருவரும் சமாதானமாகாததால், இருவரும் நீதிமன்றத்தை நாட போலீசார் அறிவுறுத்தினர். 

ஆனால், நவீன் பிரகாஷ் சென்னை சென்றுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த பாண்டீஸ்வரி நேற்று நவீன் பிரகாஷின் வீட்டுக்குச் சென்று பெற்றோரிடம் நவீன் பிரகாசை அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார்.அதற்கு அவரது பெற்றோர்கள் அவன் இங்கு இல்லை. சென்னைக்கு வேலைக்கு சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து பாண்டீஸ்வரி நவீன் பிரகாஷ் வீட்டு முன்னால் அவர் வரும் வரை இங்கிருந்து செல்ல மாட்டேன் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு, திடீரென தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை அருந்தி மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நவீன் பிரகாஷ் பெற்றோர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

அதன் படி, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாண்டீஸ்வரியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பாண்டீஸ்வரியை பரிசோதனை சீதா மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அதன் பின்னர் போலீசார் பாண்டீஸ்வரி உடலை பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.