ஈரோடு மாவட்டத்தில் திம்பம் மலைபோதையில் வேன் கவிழ்ந்த விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சேர்ந்தவர் வடிவேல். இவர் கர்நாடகா மாநிலத்தில் உள்ள மாதேஸ்வரன் மலைக்கோவிலுக்கு சாமி கும்பிட குடும்பத்தினர் 14 பேருடன் வேனில் சென்றுள்ளனர். பின்பு கோவிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு அங்கிருந்து மீண்டும் கோவை நோக்கி வேனில் வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையின் மூன்றாவது வளைவில் வந்தபோது திடீரென வேன் பிரேக் பிடிக்காததால் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 12 வயது சிறுவன் உட்பட 6 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் காயமடைந்த ஆறு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.