காங்கிரஸ் எம்பிக்கு கொலை மிரட்டல்

லூதியானா:பஞ்சாப் மாநிலத்தில், காலிஸ்தான் ஆதரவாளரான அம்ரித்பால் சிங்கின் உதவியாளரான லவ்பிரித் சிங் டூபான் சமீபத்தில் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார். இவரை விடுவிக்ககோரி அம்ரித் சிங்கின் ஆதரவாளர்கள் காவல் நிலையம் நோக்கி பேரணி சென்றனர். அப்போது போலீசாருக்கும் அம்ரித் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் பதற்றம் ஏற்பட்டது. சிறையில் இருந்த லவ்பிரித் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பஞ்சாப் காங்கிரஸ் எம்பி ரவ்னீத் சிங் பிட்டுவுக்கு வெளிநாட்டில் இருந்து மர்மநபர் ஒருவர் தொலை பேசியில் பேசியுள்ளார். அப்போது அம்ரித்துக்கு எதிராக பேசினால் கடும் விளைவுகள்  ஏற்படும் என்று அந்த நபர் மிரட்டிள்ளார். இதுகுறித்து ரவ்னித் சிங் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். முன்னாள் முதல்வர் மறைந்த பியந்த் சிங்கின் பேரன் ரவ்னித் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.