ஈரோடு கிழக்கு: அமைதியான முறையில் வாக்குப் பதிவு – மக்கள் ஆர்வம்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு காலை 7 மணி முதல் நடைபெற்று வரும் நிலையில் காலை முதலே மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி,
நாம் தமிழர்
வேட்பாளர் மேனகா நவநீதன்,
தேமுதிக
வேட்பாளர் ஆனந்த் வாக்கு செலுத்தினர்.

வாக்கு செலுத்த வந்த தேமுதிக வேட்பாளர் ஆனந்த் கட்சி துண்டு அணிந்து வந்ததால் அவருக்கு தேர்தல் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து துண்டை கழற்றிவிட்டு வந்து வாக்கு செலுத்தினார்.

“அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமானவை என அடையாளம் காணப்பட்ட வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதிகாப்பு போடப்பட்டுள்ளது” என்று மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.

இடைத்தேர்தலுக்கு 52 இடங்களில் 238 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் இதில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 பேர் ஆண்களாகவும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பேர் பெண்களாகவும் உள்ளனர்.

இந்த இடைத்தேர்தலில் 1430 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 286 வாக்குப்பதிவு கட்டுப்பாடு கருவிகள், 310 விவிபெட் இயந்திரங்கள் தேர்தலில் பயன்படுத்தப்படுகின்றன.

நான்கு மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 2200 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.