Silambarasan: இது ஒர்கவுட் ஆகாது தலைவா..கௌதம் மேனனை எச்சரித்த சிம்பு..VTV கிளைமாக்ஸ் உருவான பின்னணி ..!

தமிழ் சினிமாவில் இதுவரை பல காதல் படங்கள் வந்துள்ளன. அதில் சில படங்கள் காலத்தால் அழியாத காவியமாக திகழ்கின்றது. அதில் மிக முக்கியமான ஒரு திரைப்படம் தான் விண்ணை தாண்டி வருவாயா. கிளாஸான படங்களை இயக்குவதில் பெயர்பெற்ற கௌதம் மேனன் மற்றும் சிம்பு கூட்டணியில் இத்திரைப்படம் வெளியானது.

கார்த்திக்காக சிம்புவும், ஜெஸ்ஸியாக த்ரிஷாவும் வாழ்ந்த இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இணையமைத்திருந்தார். மேலும் விண்ணை தாண்டி வருவாயா திரைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு புது விதமான சிம்புவை அடையாளம் காட்டினார் கௌதம் மேனன். அதுவரை ஆர்ப்பாட்டமாக நடித்து வந்த சிம்பு மிகவும் கேஷுவலாக எந்த அலட்டலும் இல்லாமல் நடித்து ஸ்கோர் செய்தார்.

Leo: லியோ படத்திற்காக தன் சம்பளத்தை பல மடங்கு குறைத்த த்ரிஷா…இதான் காரணமா ?

சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் கார்த்திக்காகவே சிம்பு இப்படத்தில் வாழ்ந்தார் எனலாம். மேலும் த்ரிஷா தான் எந்த வகையிலும் சளைத்தவர் இல்லை என தன் அசாத்திய நடிப்பால் உணர்த்தினார். இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று மெகாஹிட் வெற்றியை அடைந்தது.

இதையடுத்து ஒவ்வொரு வருடமும் காதலர் தினத்தை முன்னிட்டு இப்படம் சென்னையில் பல திரையரங்கங்களில் ரீரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் விண்ணை தாண்டி வருவாயா திரைப்படம் வெளியாகி 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை அடுத்து ரசிகர்கள் இப்படத்தின் சிறப்பம்சங்கள் பற்றி இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

குறிப்பாக பல ரசிகர்கள் இப்படத்தின் கிளைமாக்ஸ் தான் படத்தின் ஹைலைட்டான விஷயம் என கூறி வரும் நிலையில் கௌதம் மேனன் இப்படத்தின் கிளைமாக்ஸ் பற்றி பேசியுள்ள கௌதம் மேனன், விண்ணை தாண்டி வருவாயா படத்தின் கிளைமாக்சில் இருவரும் சேரமாட்டார்கள் என சொன்னவுடன் சிம்பு ஷாக்காகிவிட்டார்.

இது ஒர்கவுட் ஆகாது தலைவா கிளைமாக்ஸை மாத்துங்க என சிம்பு சொன்னார், தயாரிப்பாளரும் கிளைமாக்ஸை மாற்றச்சொன்ன சமயத்தில் எடிட்டர் ஆண்டனி தான் இரண்டு கிளைமாக்ஸை வைக்க சொல்லி ஐடியா கொடுத்தார். அதன் காரணமாக தான் ஹீரோ எடுக்கும் படத்தில் கார்த்திக் மற்றும் ஜெஸ்ஸி இருவரும் சேருவதை போல காண்பித்து நிஜ வாழ்க்கையில் பிரிவதாக கதையை மாற்றினேன் என்றார் கௌதம் மேனன்.

இந்நிலையில் விண்ணை தாண்டி வருவாயா திரைப்படம் இன்றளவும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளதற்கு இப்படத்தின் கிளைமாக்ஸ் மிகமுக்கியமான காரணமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.