விருதுநகர்: பிறந்தநாளை கொண்டாடிவிட்டு கண்மாயில் குளிக்கச்சென்ற 2 சிறுவர்கள் பலி..!

விருதுநகர் மாவட்டத்தில் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு கண்மாயில் குளித்துச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் யோசேபுக்கு(16) நேற்று பிறந்த நாள் என்பதால் நண்பர்களுடன் மூன்று பேருடன் சேர்ந்து காலையில் கேக் வெட்டி கொண்டாடிவிட்டு இவர்கள் அனைவரும் பெரியகுளம் கண்மாய்க்கு குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது கமாயில் நீர் அதிகமாக இருந்ததால் இரண்டு பேர் குளிக்கவில்லை.

இந்நிலையில், யோசேபு மற்றும் கார்த்திக் (16) ஆகிய இருவரும் மட்டும் கம்மாயில் குளித்தபோது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் இரண்டு சிறுவர்களை மீட்க முயன்றனர். இருப்பினும் இரண்டு சிறுவர்களும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருத்தங்கள் காவல்துறையினர் மற்றும் சிவகாசி தீயணைப்புத்துறையினர் கண்மாயில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.