சென்னை: சட்டம் ஒழுங்கு தொடர்பாக டிஜிபியிடம் பேசினேன் என திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க பா.ஜ.க. சதித்திட்டம் தீட்டியுள்ளதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். சென்னையில் டிஜிபியை சந்தித்த பின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். நாடு முழுவதும் பதற்றத்தை உருவாக்கும் பாஜக, இந்து முன்னணி அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.