Naga Chaitanya: சமந்தாவின் காதலை மறக்காத நாக சைதன்யா: என்ன செஞ்சிருக்கார்னு பாருங்க

கவுதம் மேனன் இயக்கிய விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யாவும், சமந்தாவும் நடித்தார்கள். தெலுங்கு ஜெஸியாக சமந்தா நடித்தார். அந்த படத்தில் நடித்தபோது தான் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

பல ஆண்டுகளாக காதலித்து வந்தவர்கள் இரு வீட்டாரின் ஆசியுடன் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் நான்காவது திருமண நாளுக்கு 5 நாட்களுக்கு முன்பு பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில் ஏ மாய சேசாவே அதாங்க விண்ணைத் தாண்டி வருவாயாவின் தெலுங்கு ரீமேக் ரிலீஸாகி 13 ஆண்டுகள் ஆகிவிட்டதை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடினார்கள். அது தொடர்பான ட்வீட்டுகளை பார்த்த சமந்தாவோ, ரசிகர்களின் அன்பில் ஆடிப் போய்விட்டார்.

எப்பொழுதும் தன் மீது அன்பு காட்டும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். நாக சைதன்யாவோ, ஏ மாய சேசாவே பட ஸ்டில்ஸை இன்ஸ்டா ஸ்டோரீஸில் வெளியிட்டார். ஜெஸி தன்னை காதலித்ததும், பிரேக்கப் செய்து காயப்படுத்தியதும் இன்னும் மறக்கவில்லை என்பது போன்று இருந்து அவரின் போஸ்ட்.

நாக சைதன்யாவின் இன்ஸ்டா ஸ்டோரீஸை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

சமந்தா பாவம். தனியாக கஷ்டப்படுகிறார். மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயுடன் போராடிக் கொண்டிருக்கிறார். தயவு செய்து அவருடன் சேர்ந்து வாழவும். உங்களுக்கு ஏற்ற ரீல் ஜோடி மட்டும் அல்ல ரியல் ஜோடியும் சமந்தா தான். உங்களை மீண்டும் சேர்ந்து பார்க்க ஆசைப்படுகிறோம் என தெரிவித்துள்ளனர்.

Samantha:பழனி முருகனை தரிசித்த சமந்தா: நீங்க பண்ணது தப்புனு சொல்லும் ரசிகர்கள்

மயோசிடிஸால் அவதிப்பட்டு வரும் சமந்தா அண்மையில் தான் பழனி முருகன் கோவிலுக்கு சென்று தன் உடல்நலம் தேற வேண்டும் என பிரார்த்தனை செய்தார். 600 படிகளிலும் கற்பூரம் ஏற்றி பிரார்த்தனை செய்தார். உடம்புக்கு முடியாத நேரத்தில் சமந்தா 600 படிகள் ஏறியதை பார்த்த ரசிகர்கள் கவலை அடைந்தார்கள்.

கெரியரை பொறுத்தவரை ராஜ் மற்றும் டி.கே. ஆகியோரின் இயக்கத்தில் சிடாடல் வெப்தொடரில் நடித்து வருகிறார். அந்த வெப்தொடரில் பாலிவுட் நடிகர் வருண் தவானும் நடிக்கிறார். வருணும், சமந்தாவும் உளவாளிகளாக நடிக்கிறார்கள். இதற்காக இருவரும் பாக்ஸிங் பயிற்சி எடுத்து வருகிறார்கள்.

நைனிடாலில் கடும் குளிரில் சமந்தா பாக்ஸிங் பயிற்சி பெற்றதை பார்த்த ரசிகர்கள் வியந்துவிட்டார்கள். உடம்புக்கு இன்னும் சரியாகவில்லை சமந்தா. அதற்குள் இப்படி ரிஸ்க் எடுக்க வேண்டாம் என ரசிகர்கள் அறிவுரை வழங்கினார்கள்.

இதற்கிடையே விண்ணைத் தாண்டி வருவாயா படம் ரிலீஸாகி 13 ஆண்டுகள் ஆனதை தமிழ் ரசிகர்கள் கொண்டாடினார்கள். அந்த படத்தில் நடித்த சிம்புவும், த்ரிஷாவும் இன்னும் சிங்கிளாகத் தான் இருக்கிறார்கள். நீங்கள் இருவரும் ஏன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Trisha: இன்று சிம்பு, த்ரிஷாவுக்கு ஸ்பெஷல் நாள்: நீங்க ஏன் கணவன், மனைவியாகக் கூடாதுனு கேட்கும் ரசிகாஸ்

மேலும் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் எப்பொழுது வரும் என கவுதம் மேனனிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். கவுதம் மேனனோ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் சேர்ந்து லியோ படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.