மார்ச் 17ல் வெளியகும் உதயநிதியின் ‛கண்ணை நம்பாதே'

உதயநிதி சமீபத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'மாமன்னன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் 'கலகத் தலைவன்' மற்றும் 'கண்ணை நம்பாதே' ஆகிய இரு படங்களில் நடித்திருந்தார். இதில் 'கலகத் தலைவன்' வெளியாகி வரவேற்பை பெற்றது. ஆனால் 'கண்ணை நம்பாதே' படம் சில காரணங்களால் வெளியாகாமல் இருந்தது.

'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தை இயக்கிய மு.மாறன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் ஆத்மிகா, ஸ்ரீகாந்த், பிரசன்னா, சதீஷ், வசுந்தரா காஷ்யப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசைமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று படத்தின் டிரெய்லர் வெளியானது. ஆக்ஷன் உடன் கிரைம் கலந்த படமாக உருவாகி உள்ளது. மேலும் இப்படம் வருகின்ற மார்ச் 17ல் வெளியகும் எனவும் டிரெய்லரின் முடிவில் அறிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.