கடந்த தேர்தலைவிட அதிக வாக்கு பதிவுகள்! ஆண்களை முந்திய பெண்கள்! ஈரோடு இடைத்தேர்தலின் ரிப்போர்ட்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தமாக 74.69 சதவீத வாக்குகள் பதிவாகயுள்ளதாக, அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். 

மொத்தம் 1.69 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். இதில், ஆண்கள் – 82,021 பேரும், பெண்கள் – 87,907 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 17 பேரும் வாக்களித்துள்ளனர்.

தொகுதிக்குட்பட்ட ஒருசில வாக்குச்சாவடிகளில் மாலை 6 மணிக்கு மேல் வரிசையில் நின்ற 138 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எந்த பிரச்சினையுமின்றி, அமைதியாக நடைபெற்றது என்று, ஈரோடு மாவட்ட எஸ்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த தேர்தல் தொடர்பாக இன்று எந்த வழக்கும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை என்றும் மாவட்ட எஸ்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.

வாக்குப்பதிவு நிலவரம் :

காலை 11 மணி நிலவரப்படி 27 சதவீத வாக்குப்பதிவாகி இருந்தது. 
மதியம் 1 மணி நிலவரப்படி 44.56 சதவீத வாக்குப்பதிவாகி இருந்தது. 
மாலை 5 மணி நிலவரப்படி 70.58 சதவீத வாக்குப்பதிவாகி இருந்தது. 
முடிவில் 74.69 சதவீத வாக்குகள் பதிவாகயுள்ளது. இது கடந்த 2021 தேர்தலில் பதிவான (66.24%) வாக்குகளை விட அதிகம்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.