எதையாவது செய்து செய்திகளில் அடிக்கடி இடம் பிடிப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார், எலான் மஸ்க். `நல்லா இருந்த ட்விட்டரும், எலான் மஸ்க்கிற்கு பின்னரும்’… என நாளை படங்கள் வந்தாலும் ஆச்சர்யம் கொள்வதற்கில்லை. அந்தவகையில், பல சம்பவங்களைச் செய்து வருகிறார்.
டிவிட்டரைக் கைப்பற்றிய சில நாட்களிலேயே தனக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பவர்கள், நிரூபர்கள், விமர்சனம் செய்பவர்கள், மோசடியில் ஈடுபடுபவர்கள் எனப் பலரின் ட்விட்டர் கணக்குகளை பிளாக் செய்தார் எலான்.
இந்நிலையில், திடீரென இவர்களின் ட்விட்டர் கணக்குகளை அன்பிளாக் செய்திருக்கிறார். இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “மோசடி செய்பவர்களைத் தவிர, நான் ப்ளாக் செய்த அனைவரையும் அன்பிளாக் செய்திருக்கிறேன்.
மற்றவர்களும் அவ்வாறே செய்யப் பரிந்துரைக்கிறேன். எதிர்மறையான கருத்துகள் நல்ல விஷயமே’’ எனப் பதிவிட்டு இருக்கிறார். இன்னும் என்னென்ன செய்ய காத்திருக்கோ என்று அன்பிளாக் செய்யப்பட்டவர்கள் திகைப்பிலேயே இருக்கிறார்கள்.