நாகாவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: நாகாவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், எர்ரப்பட்டி கிராமம், நாகாவதி அணையிலிருந்து இரண்டாம் போக பாசனத்திற்காக 28.02.2023 முதல் 08.06.2023 வரை 100 நாட்களுக்கு, முறை வைத்து, அதாவது முதல் 5 நாட்களுக்கு ஒரு மண்டலத்திற்கும், அடுத்த 5 நாட்களுக்கு இரண்டாவது மண்டலத்திற்கும் தண்ணீர் விட்டு, பின்னர் 5 நாட்களுக்கு நிறுத்தியும், மொத்தம் 7 நனைப்புகளுக்கு 120.40 மில்லியன் கன அடி தண்ணீர்  திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் பென்னாகரம் வட்டத்திலுள்ள அரகாசன அளள், சின்னம்பள்ளி மற்றும் பெரும்பாலை கிராமத்திலுள்ள 1993 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.