திமுக தான் ஜெயிக்கும்: பாஜக நயினார் நாகேந்திரன் ஆருடம்!

குரூப் பாலிடிக்ஸ் பிரச்சனையில் பதவிக்கு ஆசைப்பட்டு எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து வெளியேறுவதால் சில மாநிலங்களில் ஆட்சி மாற்றம் நடைபெறுவதாகவும், பாஜக எந்த எம்.எல்.ஏ வையும் விலைக்கு வாங்கியதில்லை எனவும் தமிழகத்தில் குரூப் பாலிடிக்ஸ் இனி நடக்கலாம் என பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருமங்கலம் ஃபார்முலாவை காட்டிலும் 20 மடங்கு பணம் ஈரோடு கிழக்கு தொகுதியில் புழக்கத்தில் இருந்துள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெற வாய்ப்புள்ளது என நெல்லையில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் சாலை அமைக்கும் பணி கழிவு நீர் ஓடை பராமரிப்பு பணி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்த தமிழ்நாடு சட்டமன்ற குழு தலைவரும் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 62 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி, பாதாள சாக்கடை பராமரிப்பு பணி, கழிவுநீர் ஓடை பராமரிப்பு பணி உள்ளிட்டவைகள் நடந்து வருகிறது. நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் தேரோட்டத்திற்கு முன்பாக சாலைகள் பராமரிக்கப்பட்டு தேர் எந்தவித பிரச்சனையும் இன்றி போடுவதற்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

20 நாட்களுக்குள் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலைகளை சீரமைக்காவிட்டால் பொதுமக்களுடன் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவேன் என தெரிவித்த அவர், திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மிகக் குறைந்த அளவே பெய்துள்ள காரணத்தால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மானுர் உள்ளிட்ட பகுதிகளில் நேரடியாக கள ஆய்வு செய்து விவசாய நிலங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்து இருப்பதாகவும், நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி வரும் சட்டமன்ற கூட்ட தொடரில் கோரிக்கை வைக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

திருமங்கலம் ஃபார்முலாவை காட்டிலும் 20 மடங்கு பணம் ஈரோடு கிழக்கு தொகுதியில் புழக்கத்தில் இருந்துள்ளது. வாக்காளர்களை மண்டபத்தில் அடைத்து வைத்து உதயநிதி ஸ்டாலின் நடித்த திரைப்படத்தை போட்டு காட்டி பணம் கொடுத்துள்ளனர்.

நாகாலாந்து, மேகாலயா தேர்தல் மட்டுமல்ல வரும் அனைத்து தேர்தலும் பாஜகவிற்கு தான் ஆதரவாக அமையும் என தெரிவிந்தார். இதுவரை பாஜக எந்த எம்எல்ஏக்களையும் விலைக்கு வாங்கியதில்லை எனவும் கட்சிகளில் இருக்கும் குரூப் பாலிடிக்ஸ் காரணமாக அவர்கள் பதவிக்கு ஆசைப்பட்டு வெளியே வருவதால் சில மாநிலங்களில் ஆட்சி மாற்றம் நடைபெறுவதாக தெரவித்த அவர், தற்போது தமிழகத்தில் குரூப் பாலிடிக்ஸ் இல்லை இனி நடக்கலாம் என தெரிவித்தார்.

தமிழகத்தில் மருங்காபுரி மதுரை கிழக்கு இடைத்தேர்தலுக்கு பின்னர் எதிர்க்கட்சிகள் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதே கிடையாது. அதிகமான பணபுழக்கம் இருந்ததால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் ஆளும் கட்சி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.