திருநங்கையாக மாற எதிர்ப்பு 17 வயது சிறுவன் தற்கொலை

இடைப்பாடி: சேலம் மாவட்டம், பூலாம்பட்டி அடுத்த சிலுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மகன் வெங்கடேஷ் (17). அங்குள்ள தனியார் மீன் பண்ணையில் வேலை செய்து வந்தான். வெங்கடேஷ் இரவு நேரங்களில் வீட்டிற்கு வராமல், திருநங்கைகளுடன் சுற்றித்திரிந்துள்ளான். மேலும், தானும் திருநங்கையாக மாற வேண்டும் என கூறி வந்தான். இதற்கு அவனது தாய் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவனை சந்திக்க வந்த திருநங்கைகளுடன் பேச விடாமல் தடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த வெங்கடேஷ், கடந்த 22ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றான். இதையடுத்து, உடனடியாக இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவன், சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினான். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலை பார்த்து வந்த மீன் பண்ணையில், வெங்கடேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.