அறுவை சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் நடிகர் பிரபு..!

பிரபல நடிகர் பிரபு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள பிரபு, தற்போதும் திரைப்படங்களில் நடிப்பை தொடர்ந்து வருகிறார். 66 வயதாகும் அவருக்கு தற்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை அவர் அனுமதிக்கப் பட்டிருந்தார்.

சிறுநீரக பிரச்சனையின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவருக்கு மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில் சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. இதை அடுத்து யூரித்ரோஸ்கோபி லேசர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரக கல் அகற்றப்பட்டிருக்கிறது.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் பிரபு முழு உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துனர். ஓரிரு நாளில் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன் பின்னர் சிறுநீரகத்தில் கல் அடைப்பு பாதிப்புக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது. இந்த அறுவை சிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனையில் ஓய்வெடுத்து சிகிச்சை பெற்று வந்த பிரபு தற்போது உடல் நலம் பெற்றதை அடுத்து வீடு திரும்பி இருக்கிறார் என்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வீட்டில் சில தினங்கள் ஓய்வெடுத்து விட்டு அதன் பின்னர் வழக்கம் போல் படப்பிடிப்பில் பிரபு கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.