விசைப்படகு மீது ஹாங்காங் கப்பல் மோதல் 9 பேர் காயம்

நாகர்கோவில்: தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களைச் சேர்ந்த 9 மீனவர்கள் தூத்தூரை சேர்ந்த அந்தோணிதாசனின் ரூபி என்ற விசைப்படகில் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த பிப்ரவரி 8ம் தேதி ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இந்நிலையில், நேற்று (27ம் தேதி) சீனாவின் ஜான்ஜியங் துறைமுகத்தில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்டின் கோர் அல் ஃபக்கான் துறைமுகத்துக்கு சென்ற ஹாங்காங் கப்பல் தமிழக கேரள மீனவர்களின் மீன்பிடி விசைப்படகு மீது மோதியது. இதில் படகு கடுமையாக சேதமடைந்தது. 9 மீனவர்களும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.