இரவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தில் ஏறி நடத்துனரிடம் பணப்பை திருட்டு.. மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு!

சேலம் அருகே இரவு நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தில் நடத்துனரிடம் இருந்து பணப்பையை மர்ம ஆசாமி திருடும் காட்சிகள், சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இடங்கணசாலை பஸ் நிலையப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்றில் ஓட்டுனரும் நடத்துனரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது உள்ளே நுழைந்த மர்ம ஆசாமி ஒருவன், நடத்துனர் வைத்திருந்த பணப்பையை திருடிக் கொண்டு ஓடி விட்டான். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி உதவியுடன் திருடனை தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.