ஹைதராபாத் : தெலுங்கானாவில், உறவினரின் திருமண விழாவில் நடனமாடிய இளைஞர் ஒருவர் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தின் பர்டி என்ற கிராமத்தில் திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட மஹாராஷ்டிராவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் திடீரென சரிந்து கீழே விழுந்தார்.
உறவினர்கள் அவரை உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்தனர். திருமண நிகழ்ச்சியில் அந்த இளைஞர் ஆடிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதேபோன்று, ஹைதராபாத்தில் சமீபத்தில் ஹல்தி விழாவில் ஒருவரும், ஜிம்மில் பயிற்சி செய்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரும், இதேபோல் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement