மணிப்பூரில் திடீர் நிலநடுக்கம்

மணிப்பூர்: மணிப்பூரில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் அதிகாலை 2.46 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில், 3.2 ஆகப் பதிவானது. நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். மேலும் இந்த நிலநடுக்த்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.