திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறப்பு பெற்றது. தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
இந்நிலையில், திருத்தணி முருகன் கோயில் பிரசாத தயாரிப்பு கூடத்தில் திடீரென்று சமையல் எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பதறிய கோவில் ஊழியர்கள் பிரசாத கூடத்தில் இருந்து உடனடியாக வெளியேறினர்.
இதனை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. புகாரின் பெயரில் சிலிண்டரிலிருந்து தொடர்ந்து கேஸ் கசிவு ஏற்பட்ட நிலையில், விபத்தை தவிர்க்க நடவடிக்கை மேற்கொண்டனர்.