ஹைதராபாத்: டெல்லியில் நடைபெற்று வரும் ஆளும் ஆம் ஆத்மி அரசின் மதுபான கொள்கையில் ரூ. 100 கோடி வரை ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த ஊழல் பணம், பல்வேறு கட்சி தலைவர்களின் கை மாறியதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதனால், இவ்வழக்கு குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி,டெல்லி அமைச்சரான சத்யேந்திரஜெயினின் தொடர்பு இருப்பதை அறிந்தனர். இதனை தொடர்ந்து, அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக தொடர்ந்து நடத்திய விசாரணையில், டெல்லியில் தொழிலதிபர் அமித் அரோரா கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில், அமித் அரோரா தனது வாக்குமூலத்தில் ‘சவுத் குரூப்’ என்கிற நிறுவனம் மூலம் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பலருக்கு லஞ்சம் வழங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்த சவுத் குரூப் நிறுவனம், தெலங்கானா முதல்வர் கவிதா, அருண் பிள்ளை, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்பி மாகுண்டா ஸ்ரீநிவாஸ் ரெட்டியின் மகன் ராகவ் மாகுண்டா, சரத் ரெட்டி, அபிஷேக் மற்றும் புச்சிபாபு ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.