Samantha: சிடாடல் தொடரில் நடிக்கும் சமந்தாவுக்கு காயம்: போட்டோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி

தி ஃபேமிலி மேன் தொடர் புகழ் ராஜ் மற்றும் டி.கே. ஆகியோர் இயக்கி வரும் சிடாடல் வெப்தொடரில் நடித்து வருகிறார் சமந்தா. பாலிவுட் நடிகர் வருண் தவானும் சிடாடலில் நடிக்கிறார். வருண் தவானும், சமந்தாவும் உளவாளிகளாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உளவாளிகள் என்பதால் சமந்தா மற்றும் வருண் தவானுக்கு ஏகப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறது. ஆக்ஷன் என்றால் சமந்தாவுக்கு அல்வா சாப்பிடுவது போன்று ஆகும். அதனால் டூப் போடாமல் அவரே ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பதால் நடப்பது இது தான் என ரத்த காயம் இருக்கும் தன் கைகளை புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில் வெளியிட்டுள்ளார்.

சமந்தா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

என்ன சமந்தா இது, ஏன் இப்படி உங்களை நீங்களே கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் உடம்பு இருக்கும் நிலைமையில் ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பது தேவையில்லாத வேலை. மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயில் இருந்து நீங்கள் இன்னும் முழுமையாக குணமாகவில்லை என்பதை மறந்துவிட வேண்டாம்.

தயவு செய்து டூப் போட்டு நடிங்கள். இனியும் காயம் அடைய வேண்டாம். பெரிய பெரிய ஹீரோக்களே டூப் போட்டு நடிக்கிறார்கள். அதனால் உடம்புக்கு முடியாத நீங்கள் அப்படி செய்வதில் தவறு இல்லை என தெரிவித்துள்ளனர்.

ருஸோ சகோதரர்களின் சிடாடல் ஆங்கில தொடரை தான் சமந்தா, வருண் தவானை வைத்து இந்தியில் எடுத்து வருகிறார்கள் ராஜ் மற்றும் டி.கே. ஆங்கிலத்தில் ப்ரியங்கா சோப்ரா தான் உளவாளியாக நடித்து வருகிறார்.

சிடாடல் தொடரின் கதையை கேட்டதும் தனக்கு பிடித்துவிட்டதாக சமந்தா முன்பு தெரிவித்தார். ஆக்ஷன் காட்சிகளுக்காக ஹாலிவுட்டில் இருந்து ஸ்டண்ட் மாஸ்டரை அழைத்து வந்திருக்கிறார்கள். நைனிடாலில் நடுங்கும் குளிரில் சமந்தா பாக்ஸிங் பயிற்சி எடுத்தார். அந்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

Samantha: நடுங்கும் குளிரில் சமந்தா செய்த காரியம்: ரொம்ப தப்புமானு சொல்லும் ரசிகர்கள்

இதையடுத்து காயம் அடைந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சிடாடல் தொடர் குறித்து அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் சமந்தா. ஆனால் அவர் இப்படி காயம் அடைவார் என ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை.

மயோசிடிஸ் பிரச்சனையால் ஒரே நேரத்தில் பல படங்களில் கமிட்டாகவில்லை சமந்தா. இந்நிலையில் தான் அவர் ரிஸ்க் எடுத்து சிடாடல் தொடரில் நடித்து வருகிறார். ஆரம்பமே இப்படி என்றால் இனி போகப் போக ரிஸ்க் அதிகமாச்சே. இது நல்லதுக்கு இல்லை சமந்தா என்கிறார்கள் ரசிகர்கள்.

சமந்தா அண்மையில் தான் பழனி முருகன் கோவிலுக்கு சென்று தன் உடல்நலம் தேற பிரார்த்தனை செய்தார். 600 படிகளில் கற்பூரம் ஏற்றி வேண்டினார். அவர் 600 படி ஏறியதற்கே அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், தற்போது ரத்தக் காயத்தை பார்த்து கவலை அடைந்துள்ளனர்.

ஆக்ஷன் என்று வந்தால் காயம் ஏற்படுவது சகஜம் தான். ஆனால் சமந்தா தற்போது இருக்கும் நிலையில் அவர் உடம்பு இதை தாங்குமா என்பதே ரசிகர்களின் கவலைக்கு காரணம் ஆகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.