புகைப்பட கருவி (கெமரா) தொழிநுட்ப செயலமர்வு

அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் மெட்ரோ பொலிடன் நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்த புகைப்பட கருவி – கெமரா தொழிநுட்ப செயலமர்வு வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் நேற்று (27) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.

ஊடகவியலாளர்கள் மற்றும் அமைச்சின் ஊடக அதிகாரிகள் உள்ளிட்ட ஊடகத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்காக இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

லென்ஸ் (lance) இல்லா கெமெராக்களை பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இடம்பெற்ற இந்த செயலமர்வில், உயர் அதிகாரிகள் குழுவொன்று நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தியதுடன், அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.